
புவனேஸ்வர்: ஒடிசாவில் சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்த தாயை சிகிச்சைக்காக 5 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்றுள்ளார் அவரது மகள். ஆனால் காலதாமதத்தால் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒடிசா மாநிலம் கந்தர்பால் மாவட்டம் துமேரிபடா கிராமத்தைச் சேர்ந்த பாலமது மாஜியை கடந்த வெள்ளிக்கிழமை பாம்பு கடித்துள்ளது. இதை அறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.