
சென்னை: இன்னும் 70 ஆண்டுகள் ஆனாலும் இனி திமுகவுக்கு தமிழகத்தில் இடமில்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘மக்களைக் காப்போம்: தமிழகத்தை மீட்போம்' என்ற பயணத்தை கோவையில் கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்கினேன். இதுவரை 21 நாட்களில் 14 மாவட்டங்கள், 61 சட்டப்பேரவை தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளேன். 3,200 கி.மீ. தூரம் பயணித்துள்ளேன். சுமார் 25 லட்சம் மக்களை சந்தித்து, நேரடியாக உரையாடி அவர்களின் குறைகளை, கோரிக்கைகளை, எண்ணவோட்டங்களைக் கேட்டறிந்தேன். இந்த பயணத்தில் சுமார் 42 மணி நேரத்துக்கும் மேலாக மக்களிடம் உரையாற்றியுள்ளேன்.