
திருநெல்வேலி: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு நேற்று இரவு விருந்து அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் நெல்லை சந்திப்பில் உள்ள ஓட்டலில் இரவு தங்கினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220-வது நினைவு தினத்தையொட்டி, அவரது படத்துக்கு பழனிசாமி நேற்று காலை மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.