
சென்னை: வாழ்நாள் முழுவதும் எதிர்த்து அரசியல் செய்த திமுகவை நோக்கி ஓபிஎஸ் போவது துரோகத்தின் வெளிப்பாடு என்று தமிழிசை விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை நேற்று கூறியதாவது: தினம் தினம் போராட்டமாக இருக்கிறது என்கிறார் முதல்வர் ஸ்டாலின். அப்படி போராடும் அளவுக்கு மத்திய அரசு என்ன அநீதியை இழைக்கிறது. உண்மையில், வாழ்க்கையை நடத்துவதற்கும், பாதுகாப்புக்கும், மருத்துவமனை செல்வதற்கும் தமிழக மக்களுக்குதான் தினம் தினம் போராட்டமாக இருக்கிறது. மருத்துவமனைகளின் அவலநிலை அனைத்து ஊடகங்களிலும் வெளிவருகிறது.