• August 4, 2025
  • NewsEditor
  • 0

தூத்துக்குடி: தூத்​துக்​குடி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள வின்ஃ​பாஸ்ட் நிறு​வனத்​தின் மின்​சார கார் தொழிற்​சாலையை முதல்​வர் ஸ்டா​லின் இன்று காலை திறந்து வைத்​து, முதல் விற்​பனையை தொடங்கி வைக்​கிறார்.

வியட்​நாம் நாட்டை சேர்ந்த வின்ஃ​பாஸ்ட் நிறு​வனம் ரூ.16 ஆயிரம் கோடி​யில் ஆண்​டுக்கு 1.50 லட்​சம் வாக​னங்​களை உற்​பத்தி செய்​யும் வகை​யில், தூத்​துக்​குடி​யில் மின்​சார கார் உற்​பத்தி தொழிற்​சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொண்​டது. முதல்​வர் ஸ்டா​லின் கடந்த ஆண்டு இந்த ஆலைக்கு அடிக்​கல் நாட்​டி​னார். முதல்​கட்​ட​மாக ரூ.1,120 கோடி செல​வில் 114 ஏக்​கரில் தொழிற்​சாலை அமைக்​கப்​பட்​டுள்​ளது. இங்கு தற்​போது வி.எஃப்​-6, வி.எஃப்-7 வகை கார்​கள் உற்​பத்தி செய்​யப்​பட்டு விற்​பனைக்கு தயா​ராக உள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *