
பெங்களூரு: வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு (34) சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறையில் அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அவர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 15528 வழங்கப்பட்டுள்ளது.