
ஓசூரில் செயல்படும் 2 அம்மா உணவகங்களை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், தரமற்ற உணவு, பாதுகாப்பற்ற குடிநீர் வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஓசூர் பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை அருகே ஏரித்தெரு ஆகிய 2 இடங்களில் மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கு மலிவான விலையில் உணவுகள் வழங்கப்படுவதால், ஏழை எளிய மக்களின் பசிப்பிணி போக்கும் உணவகமாக உள்ளது. இங்கு தினமும் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உணவுகளைச் சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், 2 உணவகங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை எனவும், இதனால், தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.