
பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் மீதான 3 வழக்குகளை ரத்து செய்தும், அவரை கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவுகள் செல்லாது என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான அலெக்சிஸ் சுதாகர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாமல்லபுரம் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது, அங்கு வந்த சீர்காழியை சேர்ந்த பிரபல ரவுடி சத்யாவை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். பதிலுக்கு அவரும் போலீஸாரை நோக்கி சுட்டார்.