
வாராணசி: உத்தர பிரதேசத்தின் வாராணசியில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.2,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசியதாவது: இன்றைய தினம் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.20,500 கோடி செலுத்தப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டம் விரைவில் நிறுத்தப்படும் என்று காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்தன. ஆனால் இந்த திட்டம் இன்றுவரை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.