
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி மூவர்ணக் கொடி யாத்திரை மற்றும் இதர பணிகளை ஒருங்கிணைக்க தமிழக பாஜகவில் மாநில அளவிலான குழுவை நயினார் நாகேந்திரன் நியமித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்தாண்டு சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, திரங்கா (மூவர்ண கொடி) யாத்திரை, வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றுதல் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஆக.10-ம் தேதி முதல் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.