
சென்னை: மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, காவல் துறையினரின் பணிச்சுமை மற்றும் மன உளைச்சலை கருத்தில் கொண்டு பல்வேறு வழிக்காட்டுதல் நெறிமுறைகளை வரையறை செய்து, காவல்துறை தலைமை இயக்குநர், குற்ற வழக்கு தொடர்வு இயக்குநர் மற்றும் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில், முக்கியமான வழக்குகள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிடும் வழக்குகளில் மட்டுமே காவல்துறையினரை வரவழைக்க வேண்டும். காவல் துறையினர் நேரடியாக வரத்தேவையில்லாத வழக்குகளில் அவர்களை நீதிமன்றங்களுக்கு வரவைப்பதை அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.