
புதுடெல்லி: டெல்லியின் பிரகதி மைதானத்தில் 10-வது சர்வதேச போலீஸ் கண்காட்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன், மையமாக ‘மேக் இன் இந்தியா’ தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கண்காட்சி, சட்ட அமலாக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட அதிநவீன உள்நாட்டு தொழில்நுட்பங்கள் காட்சிப் பொருட்களாக உள்ளன. இக்கண்காட்சியில் 5,000-க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.