
சென்னை: ரஷ்யாவில் போருக்கு அனுப்பப்பட விருக்கும் தமிழக மாணவரை மீட்க தொடர் முயற்சி எடுத்து வருவதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்தார். சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர். ரஷ்யாவில் மருத்துவம் படிக்கும் அவர், கடந்த 2023-ம் ஆண்டு ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு ஆயுதபயிற்சி, போதை மருந்து போன்றவற்றை கொடுத்து போருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இதனால் மனரீதியாக பெரும் துயரில் இருப்பதாக கிஷோர் கூறியுள்ளார். அவர் எப்போது வேண்டுமானாலும் போருக்கு அனுப்பப்படலாம். அப்படி அனுப்பினால் நாம் அவரை இழக்க நேரிடும்.