• August 2, 2025
  • NewsEditor
  • 0

கோவை: கோவை மாநகரில் சாலையோர பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ள மாநகராட்சி நிர்வாகத்தினர், தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்க வரவில்லை என்றால் புகாா் தெரிவிக்கவும் பிரத்யேக எண்களை அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் இன்று (ஆக.2) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட 100 வார்டுகளில், வீதிகள் வாரியாக குப்பையை (திடக்கழிவுகள்) மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக, தள்ளுவண்டிகள், பேட்டரி வண்டிகள், இலகுரக வாகனங்கள் ஆகியவற்றின் மூலமாக சேகரிக்கப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *