
மதுரை / தென்காசி: பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரும்போது, அவரை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டால் கட்டாயம் ஏற்பாடு செய்வோம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை சிந்தாமணி பகுதியில் பாஜக தென் மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது எதற்காக என்று தெரியவில்லை. அவர் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்புவரை, செல்போன் மூலமாக பேசிக் கொண்டுதான் இருந்தேன். அவர் விலகியதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.