• August 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘வேர்​களைத் தேடி’ திட்​டத்​தின்​கீழ் 14 நாடு​களில் இருந்து தமிழகம் வந்​துள்ள 99 அயலக தமிழ் இளைஞர்​களின் பண்​பாட்டு சுற்​றுப் பயணத்தை சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அயலகத் தமிழ் இளைஞர்​களுக்​கான ‘வேர்​களைத் தேடி’ என்ற கலாச்​சார பரி​மாற்ற சுற்​றுலா திட்​டத்தை சிங்​கப்​பூரில் கடந்த 2023-ல் நடை​பெற்ற தமிழ் கலை, பண்​பாட்டு நிகழ்ச்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார். தமிழ் கலை, பண்​பாடு, கலாச்​சா​ரத்தை அயலக தமிழர்​களிடம் பரி​மாற்​றம் செய்​வது, புலம்​பெயர்ந்து வாழும் இளைஞர்​களுக்கு தமிழகத்​தின் ‘மரபின் வேர்​களோடு’ உள்ள தொடர்பை புதுப்​பிப்​பது ஆகிய​வையே இதன் நோக்​கம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *