
வீட்டு மனை பிரிவுக்கு அப்ரூவல் கேட்கும் ரியல் எஸ்டேட் காரர்களிடம் ‘கவனிக்கச்’ சொல்லி கை நீட்டுவது அரசியல் வாதிகளுக்கு பழகிப் போன சமாச்சாரம் தான். ஆனால், வேலூர் மேயர் தரப்பும் எம்எல்ஏ தரப்பும் பிளாட்களை குறைந்த விலைக்கு எழுதிக் கேட்பதாக அதிமுக-வினர் பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் மனைப்பிரிவுக்கு ஒப்புதல் கேட்டு மாதக்கணக்கிலும், ஆண்டுக் கணக்கிலும் பலரும் காத்திருக்கின்றனர். மனைப் பிரிவுக்கு ஒப்புதல் தரவேண்டுமானால் இடத்தின் மதிப்புக்கு ஏற்ற விதத்தில் சம்திங் கொடுக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான விலையில் பிளாட்களை பத்திரம் பதிந்து கொடுக்க வேண்டும் என மாநகராட்சி தரப்பில் கண்டிஷன் போடுவதாலேயே இந்தத் தேக்க நிலை என்கிறார்கள்.