• August 1, 2025
  • NewsEditor
  • 0

என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி எம்எல்ஏ தெரிவித்தார்.

கரூர் அருகேயுள்ள பண்டுதகாரன்புதூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிகளுடன் கலந்துரையாடிய வி.செந்தில் பாலாஜி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியது: பெண்கள் அரசு அதிகாரிகளாகி மக்களுக்கு சேவை செய்வதுபோல, அரசியலிலும் ஈடுபட்டு பெண்களுக்கான உரிமைகள், சேவைகளை பெற வேண்டும். என் மீதான ஊழல் குற்றச்சாட்டில் எனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. முன்னாள் முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகார் அளித்தோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *