• August 1, 2025
  • NewsEditor
  • 0

பிரம்மஹத்தி பரிகார ஹோமம்: உங்களின் எல்லா கஷ்டங்களுக்கும் இதுதான் காரணமா! சங்கல்பித்தால் தீர்வுவரும்! 2025 ஆகஸ்ட் 17-ம் நாள் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

பிரம்மஹத்தி பரிகார ஹோமம்

உங்கள் ஜாதகத்தை வைத்து அதில் என்னென்ன தோஷங்கள் உள்ளன என்று கணித்துவிடலாம் என்கிறது ஜோதிடம். பல்வேறு தோஷங்களில் முதன்மையானது பிரம்மஹத்தி தோஷம். இந்த தோஷம் உள்ளவர்களின் வாழக்கையில் நிம்மதியே இருக்காது. எத்தனை முயன்றாலும் முன்னேற்றம் என்பதே வராது. நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஊதியம், பதவி உயர்வு, சலுகைகள் என எதுவுமே கிடைக்காது. அவ்வளவு ஏன் திருமணம், மகப்பேறு போன்ற மங்கல காரியங்கள் கூட உங்கள் வீட்டில் நடைபெறாமல் சிக்கலாகி நிற்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்துக்கு 4-ம் இடத்தில் கெடுதல் தரும் கிரகங்கள் இருந்து, 6, 8, 12-ம் இடங்களில் நலம் தரும் கிரகங்கள் இருந்தாலும், 5, 9-ம் வீடுகளுக்கு அதிபதியாக அசுப கிரகங்கள் இருந்தாலும் பிரம்மஹத்தி தோஷம் அவர்களுக்கு உள்ளதென ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராகுவின் இருக்கும் ராசியில் இருந்து 5 மற்றும் 9-ம் வீட்டில் சனி, குரு சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும் பிரம்மஹத்தி தோஷம் உள்ளதாக அறியலாம். இந்த பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி பரிகாரம் பெற சில வழிகள் உண்டென ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதில் சிறப்பானது பிரம்மஹத்தி பரிகார ஹோமம்.

போரில் ராவணனை வென்ற ஸ்ரீராமபிரான், தெரிந்தோ தெரியாமலோ போரில் உயிரிழந்த மனக்கேதம் நீங்கவும் தன்னைப் பற்றிய பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும் ராமேஸ்வரத்தில் நீராடி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பிரம்மஹத்தி பரிகார பூஜை செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. அவ்வாறே வரகுண பாண்டியனும் படுத்திருந்த ஒருவரை தெரியாமல் குதிரையில் செல்லும்போது மிதித்துக் கொன்றுவிட்டார். அந்த கொலைபாவம் நீங்க, பிரம்மஹத்தி தோஷம் விலக திருவிடைமருதூரில் பரிகார பூஜைகள் செய்தார் எனப்படுகிறது.

அதேபோல விக்கிரமச் சோழரின் பிரம்மஹத்தி தோஷத்தை கும்பகோணம் திப்பிராஜபுரத்தில் உள்ள ஸ்ரீசோளேஸ்வரர் தீர்த்தார் என்றும், அதற்காக அப்பெருமானுக்கு அங்கே சோழன் கோயில் எழுப்பினான் என்றும் வரலாறு கூறுகிறது.

கும்பகோணம், மன்னார்குடி சாலையில் வலங்கைமானுக்கு அருகே கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது திப்பிராஜபுரம். விஜயநகர மன்னர்களின் ஆட்சியில் அமைச்சராக இருந்த திப்பையா பெயரிலேயே திப்பையாராஜபுரம் என்றாகி அதுவே திப்பிராஜபுரம் என்றானது என்கிறது வரலாறு.

brammahaththi homam

அக்னி ஹோத்ரிகளும் பெரும் ஞானிகளும் வாழ்ந்த இந்த ஊர் காஞ்சி மகாபெரியவரின் விருப்பமான ஊர் எனப்படுகிறது. இந்த ஊரில் 3000 பழைமையான ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் ஆலயம் அமைந்துள்ளது. திருமாலின் அம்சத்தையும் தாங்கியுள்ள அபூர்வ சிவலிங்க வடிவமே ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர்.

தற்போது முழுவதுமாக சிதிலமடைந்து திருப்பணியை எதிர்நோக்கி இருக்கும் இந்த ஆலயத்தை கவனித்து வரும் ஞானமூர்த்தி சிவகன்று ஸ்ரீகருணா அமுத சுவாமி அவர்கள் கருவிலேயே திரு படைத்த தவச்செல்வர். திருஞான சம்பந்தரைப் போல சிறுகுழந்தை முதலே பாடல்கள் புனையும் திருவருள் வாய்க்கப்பட்டவர். இவரின் அசாத்திய ஞானத்தைக் கண்ட குருதேவ் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் உள்ளிட்ட ஆன்மிகப் பெரியோர்கள் பலரும் இவரை ஆசிர்வதித்து பெருமை கொள்ளச் செய்திருக்கிறார்கள். இதுவரை 10,000 ஆன்மிகப் பாடல்களை இயற்றியுள்ள இந்த பால மகானின் மேற்பார்வையில் இந்த ஆலயத்தில் அன்பர்களின் குறைகளைத் தீர்க்கும் பிரம்மஹத்தி ஹோமம் நடைபெற உள்ளது. 2025 ஆகஸ்ட் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் கும்பகோணம் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

பிரம்மஹத்தி தோஷத்தால் தொழிலில் தோல்வி, வியாபாரத்தில் நஷ்டம், கூடி வரும் திருமணம் தள்ளிப் போதல். எல்லா பணிகளும் பாதியில் நிற்றல். அடிக்கடி ஏமாந்து பணத்தை இழப்பது, சொந்தங்களால் ஏமாற்றப்படுவது என பல ஆண்டுகள் பரிதவித்து நிற்பவர்களுக்கு நிச்சயம் இந்த பிரம்மஹத்தி தோஷ ஹோமம் பலன் அளிக்கும். அதுவும் திப்பிராஜபுரம் என்னும் இந்த திருத்தலத்தில் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் ஆலயத்தில் இந்த பரிகார ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் உங்களின் எல்லா பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் நலமும் வளமும் பெறுவீர்கள் என்பது உறுதி.

QR CODE FOR BRAMMAHATHTHI HOMAM

வாசகர்களின் கவனத்துக்கு!

இந்த ஹோம வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஹோம பஸ்பம், ரட்சை மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். வாசகர்கள், இந்த வழிபாட்டு வைபவங்களை சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வீடியோ வடிவில் தரிசிக்கலாம்.  https://www.facebook.com/SakthiVikatan

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *