
சென்னை: கோயில்களின் ஆண்டு வருமானம் ரூ.345 கோடி என அறநிலையத்துறை தெரிவித்துள்ள நிலையில், உண்டியல் காணிக்கை, கோயில்களுக்கு சொந்தமான கட்டிடங்களின் வாடகை கட்டணம் எங்கே செல்கிறது என்று இந்து முன்னணி கேள்வி எழுப்பி உள்ளது.
இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றத்தில் கோயில் நிதியில் கட்டிடங்கள் கட்டுவது சம்பந்தமான பொதுநல வழக்கில், அறநிலையத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.