
புதுடெல்லி: பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று 8-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிஹாரில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் சிறப்பு திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையை பறிப்பதே இதன் நோக்கம் என்று அவை குற்றம்சாட்டி வருகின்றன.