
ஆளும் கட்சியாக இருந்தாலும் தேர்தல் வந்தால் தான் கட்சியின் அடிமட்டத்தில் இருப்பவர்களைப் பற்றி மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு ஞாபகத்துக்கு வரும். அப்படித்தான் அண்மையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள திமுக கிளைக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அண்ணாச்சி தயவில் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
ஆனால், “அண்ணாச்சி கொடுக்கச் சொன்ன பணம் ஒன்றியத்துக்கு மட்டும் தான் வந்தது, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர நிர்வாகிகளுக்கு அவர் கொடுக்கச் சொன்ன பணத்தை சேர்மன் இன்னும் கொடுக்கல” என்று புலம்பித் தீர்க்கிறார்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர திமுக நிர்வாகிகள்.