• August 1, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: எ​திர்க்​கட்​சிகளின் அமளி​யால் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் நேற்று முடங்​கின. நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்​கியது. ஆபரேஷன் சிந்​தூர், பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி உள்ளிட்ட பல்​வேறு விவ​காரங்​களை எழுப்பி எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் தொடர் அமளி​யில் ஈடு​பட்​டனர். இதன் காரண​மாக தொடர்ச்சி​யாக 5 நாட்​கள் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் முடங்​கின.

இதைத் தொடர்ந்து கடந்த 28, 29 ஆகிய தேதி​களில் ஆபரேஷன் சிந்​தூர் தொடர்​பாக மக்​களவை​யில் சிறப்பு விவாதம் நடை​பெற்றது. கடந்த 29, 30 ஆகிய தேதி​களில் மாநிலங்​களவை​யில் சிறப்பு விவாதம் நடை​பெற்​றது. இதன்​பிறகு நேற்று காலை 11 மணிக்கு நாடாளு​மன்​றம் கூடியது. மக்​களவை தொடங்​கியதும் பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணியை எதிர்த்து காங்​கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கோஷம் எழுப்​பின. அவையை நடத்த முடி​யாத சூழலில் பிற்​பகல் 2 மணி வரை அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *