
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவால் கைவிடப்பட்டவர்கள் தான் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா அழைப்புவிடுத்துள்ளார். மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், பொதுச் செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததைப் போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக அண்மையில் வைகோ குற்றஞ்சாட்டியிருந்தார்.