
விழுப்புரம்: அன்புமணியின் நடைபயணத்தை மக்களும், கட்சியினரும் ஏற்க மாட்டார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாமகவின் வேர் தைலாபுரத்தில் மட்டும்தான் இருக்கிறது. கட்சிக்கு நிறுவனர்-தலைவர் இரண்டும் நான்தான். பாமக தலைவர் என்று வேறுயாரையும் (அன்புமணி) குறிப்பிடக் கூடாது. தலைமைக்கும், தலைவருக்கும் கட்டுப்படாமல் யாத்திரை செல்வதால் துளியும் பயனில்லை. தொண்டரும், மக்களும் அன்புமணியின் நடைபயணத்தை ஏற்க மாட்டார்கள்.