
தூத்துக்குடி / சென்னை: சாதி, மதம் பெயரால் நடக்கும் கொலைகளைத் தடுக்க தனி சட்டம் அவசியம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். நெல்லையில் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷ் குடும்பத்தினரை, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் உள்ள அவர்களது வீட்டுக்கு திருமாவளவன் நேற்று சென்று சந்தித்தார்.
கவின் செல்வகணேஷ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கவின் கொலையில் வேறு யாரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பது தொடர்பாக விசாரிக்க வேண்டும். சுர்ஜித் ஆத்திரப்பட்டு இக்கொலையைச் செய்யவில்லை. கவினோடு நெருக்கமாக உறவாடி இருக்கிறார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர் அழைத்ததுமே, அவரோடு கவின் போயிருக்கிறார். நீண்டகாலமாக திட்டமிட்டுத்தான் இந்த கொலை நடந்திருக்கிறது.