• August 1, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: ராம​நாத​புரம் ராஜவீ​தி​யைச் சேர்ந்த யாசர் அராபத், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறியிருப்ப​தாவது: தமிழக டிஜிபி சங்​கர் ஜிவால் ஆக.31-ல் ஓய்வு பெறுகிறார். அடுத்த டிஜிபி பதவிக்​கான தகுதி வாய்ந்த ஐபிஎஸ் அதி​காரி​களின் பட்​டியலை மத்​திய அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​துக்கு தமிழக அரசு இது​வரை அனுப்​ப​வில்​லை. தற்போதைய டிஜிபிக்கு பணி நீட்​டிப்பு வழங்​க​வும், அவரை பொறுப்பு டிஜிபி​யாக நியமிக்​க​வும் வாய்ப்​புள்​ள​தாக கூறப்​படு​கிறது.

எனவே, தற்​போதைய டிஜிபி சங்​கர் ஜிவாலை ஓய்​வுக்​குப் பிறகு, பொறுப்பு டிஜிபி​யாக நியமிக்​க​வும், சங்​கர் ஜிவாலின் பணிக் காலத்தை நீட்​டிப்​புச் செய்​ய​வும் இடைக்​கால தடை விதித்​தும், டிஜிபி பதவிக்கு தகு​தி​யான ஐபிஎஸ் அதி​காரி​களின் பட்​டியலை தமிழக அரசு உடனடி​யாகத் தயார் செய்​ய​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனு விரை​வில்​ விசா​ரணைக்​கு வரவுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *