
சென்னை: தெலங்கானாவில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதலில் வந்துள்ள நீதிபதி டி.வினோத்குமாருக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த டி.வினோத்குமாரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. அதையேற்று அவரை இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.