
சென்னை: எம்.எஸ்.சுவாமிநாதன் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆக.7-ம் தேதி சர்வதேச மாநாடு டெல்லியில் நடைபெறவுள்ளது என சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
சென்னை சிவானந்தா சாலையில் உள்ள பத்திரிக்கை தகவல் அலுவலகத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமானது, ஊட்டச்சத்து, எழை எளிய மக்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.