
சென்னை: போதிய பணியாளர்கள் இல்லாததால் அரசு விடுதி கழிவறைகளை மாணவர்களே கழுவும் கொடுமை அரங்கேறி வருவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கான 36 அரசு ‘சமூகநீதி விடுதிகள்’ எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி நோய் பரப்பும் கூடாரங்களாகி, வாழத்தகுதியற்ற வசிப்பிடங்களாக உருமாறி வருவது அதிர்ச்சியளிக்கிறது.