• August 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை, தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா நேற்று திடீரென சந்​தித்து பேசி​யது அரசி​யல் வட்​டாரங்​களில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் கடந்த மக்​கள​வைத் தேர்​தலின்​போது அதி​முக கூட்​ட​ணி​யில் தேமு​திக இடம் பெற்​றிருந்​தது. அந்​தக் கூட்​ட​ணி​யில் தேமு​தி​க​வுக்கு 5 இடங்​கள் வழங்​கப்​பட்​டன. இதுத​விர ஒரு மாநிலங்​களவை இடமும் வழங்​கப்​படு​வ​தாக தேமு​தி​க​வுக்கு உறுதி அளிக்​கப்​பட்​டது.

ஆனால், கூட்​டணி ஒப்​பந்​தத்​தின்​படி தேமு​தி​க​வுக்கு மாநிலங்​களவை இடத்தை அதி​முக வழங்​க​வில்​லை. மாறாக அடுத்​தாண்டு நடை​பெறவுள்ள தேர்​தலில் இடம் வழங்​கு​வ​தாக அதி​முக அறி​வித்​தது. இதனால் தேமு​திக தரப்​பினர் அதிருப்தி அடைந்​தனர். அதைத்​தொடர்ந்​து, கூட்​டணி நிலைப்​பாட்டை ஜனவரி​யில் அறி​விப்​போம் என்று தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் அறி​வித்​தார். இதன்​மூலம் அதி​முக கூட்​ட​ணி​யில் நீடிக்​க​வில்லை என்​பதை தேமு​திக சூசக​மாக தெரி​வித்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *