
சென்னை: அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் தரத்தை தொடர்ந்தும் மேம்படுத்த ஆசிரியர்கள் செயலாற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். சென்னை மாவட்ட அளவிலான கற்றல் அடைவுத் தேர்வு (ஸ்லாஸ்) முடிவுகள் குறித்து தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டம் புரசைவாக்கத்தில் நேற்று நடைபெற்றது.
இதற்கு தலைமை வகித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: தமிழகத்தில் 16-வது மாவட்டமாக தற்போது சென்னையில் உள்ள தலைமை ஆசிரியர்களை சந்தித்து கருத்துகளை கேட்டுள்ளேன். நமது மாநிலத்தில் மற்ற மாவட்டங்களில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாகும்.