
ராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் பேசி, உரிய தீர்வுகாண முயற்சிப்பேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் பழனிசாமி, ராமநாதபுரத்தில் மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் நேற்று பேசியதாவது: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும், இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை மீட்கவும் மத்திய அரசிடமும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமும் பேசி, உரிய தீர்வுகாண முயற்சிப்பேன்.