
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த மூத்த பெண் மருத்துவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச் 15 முதல் ஜூன் 25 வரையில் என்னுடைய செல்போனில் வாட்ஸ்-அப்பில் அழைத்த ஒரு பெண், தனது பெயர் ஜோதி விஸ்வநாத் என்றும் தொலைத்தொடர்புத் துறையில் இருந்து பேசுவதாகவும் கூறினார். இதுபோல காவல் துணை ஆய்வாளர் என மோகன் சிங் என்பவரும் அரசு வழக்கறிஞர்கள் எனக் கூறி மேலும் 3 பேரும் செல்போனில் அழைத்தனர்.