
சென்னை: சமூக நலம், மகளிர் உரிமை துறை சார்பில் வடிவமைக்கப்பட்ட ‘தமிழ்நாடு மாநில திருநங்கையர் நல கொள்கை – 2025’-ஐ சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
சமூகநல துறை அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலர் முருகானந்தம், துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், கூடுதல் செயலர் வளர்மதி, இயக்குநர் சங்கீதா, மாநில திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.