
சென்னை: பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்தார். இதை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீண்ட காலமாக பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வந்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், பாஜக தலைமை அவரிடம் பாராமுகமாக இருந்த நிலையில்கூட, நாங்கள் பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம் என கூறி வந்தார். கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.