
ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை 3 மாதங்களில் தெரு நாய்கள் கடித்து 446 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், நாய்களை கட்டுப்படுத்த நோயுற்ற நாய்களை கருணை கொலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகள் மற்றும் அதனைச் சுற்றி உள்ள ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இத்தெரு நாய்கள் சாலையோரங்களில் வீசப்படும் இறைச்சிக் கழிவுகளைச் சாப்பிட கூட்டம், கூட்டமாகச் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.