• July 31, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதன் மூலம், காங்கிரஸ் கட்சியின் இந்து பயங்கரவாதம் எனும் சதி முறியகடிக்கப்பட்டுள்ளது என்று பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 7 பேரும் விடுவிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத், “காங்கிரஸின் இந்து பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவருக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை. காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடிய கர்னல் புரோஹித் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்குச் சொந்தமானது என கூறி அவரும் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு நடக்க முடியாத அளவுக்கு அவர் சித்ரவதை செய்யப்பட்டார். இது வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் செய்த சதி.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *