
ஈரோடு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முற்பட்டு, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கிய பயணியை, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார்.
கோவையில் இருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த இன்டர்சிட்டி அதிவேக ரயில், ஈரோடு ரயில் நிலைய முதல் நடைமேடைக்கு நேற்று வந்தது. அப்போது ரயிலில் இருந்து தேநீர் வாங்குவதற்காக பயணி ஒருவர் இறங்க முயற்சித்தார். ரயில் வேகம் குறையாத நிலையில், ஓடும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய அவர் இழுத்து செல்லப்பட்டார்.