• July 31, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நெல்லையில் ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவருடைய தோழி சுபாஷினி தன்னிலை விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தானும் கவினும் உண்மையகவே காதலித்ததாகவும். இந்தக் கொலையில் தனது பெற்றோருக்கு தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். கவினின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தாயும் கைது செய்யப்படலாம் என்ற சூழலில் கவின் தோழியின் வீடியோ வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சாரணடைந்த நிலையில், சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *