
சென்னை: மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கையருக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.40 ஆயிரம் வரை தனிநபர் கடனுதவி வழங்க தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சுயஉதவிக் குழுக்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் (ஆண்/பெண்) மற்றும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களை தொழில் முனைவோராக ஊக்குவிக்கும் வகையிலும் தனிநபர் ஒருவருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் 6 ஆயிரம் பேருக்கு கடனுதவி வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.