
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் திமுக-வினர், வீடு வீடாகச் சென்று மக்களிடம் 6 கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். இவை பெரும்பாலும் ஆம் என்று பதிலளிக்கும் விதத்திலேயே இருக்கின்றன. இவற்றுக்கு பதில்களைப் பெற்று விருப்பமுள்ளவர்களை கட்சியில் சேர்த்து வருகிறது திமுக. இரண்டு கோடி பேரை கட்சியில் சேர்க்கும் திட்டத்துடன் இதைச் செயல்படுத்தி வரும் திமுக-வினர், வீடுகளில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற ஸ்டிக்கரையும் மறக்காமல் ஒட்டி வருகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக-வினரும், ‘உருட்டுகளும், திருட்டுகளும், துரோக மாடல் உருட்டுகள்’ என்ற தலைப்பில் 10 கேள்விகளை தயார் செய்துள்ளனர். இவை பெரும்பாலும் இல்லை என்று பதில் சொல்லும் விதமாகவே உள்ளன. இவர்களும் வீடு வீடாகச் சென்று இந்தக் கேள்விகளுக்கு பொதுமக்களிடம் பதில்களைக் கேட்டு வருகின்றனர்.