
சென்னை: மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்கள் பயன்படுத்ததடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால், மெட்ரோ ரயில்வே சட்டத்தின் கீழ், ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில், 2 வழித் தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 3 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நாள்தோறும் தூய்மையாக வைத்திருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.