
பாட்னா: பிஹார் மாநிலம் பாட்னாவில் நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்டது சர்ச்சையை எழுப்பியுள்ளது. பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நடைபெற்று வரும் நேரத்தில் நடந்த இச்சம்பவம், அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு செயல்முறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
நாய்க்கு வழங்கப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் விவரமும் வெளியாகியுள்ளது. அந்தச் சான்றிதழ் எண் பிஆர்சிசிஓ/2025/15933581, வார்டு எண் 15, மசாவர்ஹி நகராட்சி கவுன்சில் என்றும் இந்த பகுதியில் பாபு (நாய்) வசித்து வருகிறார் என்றும் அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.