
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த டி.ராமதாசப்ப நாயுடு (61) மத்திய அரசின் பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ‘முத்ரா விவசாய திறன் மேம்பாட்டு மல்டி ஸ்டேட் கூட்டுறவு சொசைட்டி’ நிறுவனத்தை கடந்த 2020-ல் தொடங்கினார். இதில் முக்கிய நிர்வாகியாக இவரது மகன் சாய் கிரண் (45) நியமனம் செய்யப்பட்டார்.
தந்தையும், மகனும் இணைந்து இந்த கூட்டுறவு சங்கத்தில் 2000 பேருக்கு மார்க்கெட்டிங் சூப்பர்வைஸர் வேலை வழங்குவதாக ஒரு பத்திரிகையில் விளம்பரம் செய்தனர். இதனை நம்பி ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 1,600 பேர் சேர்ந்தனர். சங்கத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி வழங்குவோம் என பொதுமக்களிடம் கூறி, ஆட்களை சேர்க்க வேண்டும் என இலக்கும் கொடுத்தனர்.