
புதுடெல்லி: 1965-ம் நடந்த போரில் 45 விமானங்களையும், 1971-ல் நடந்த போரில் 71 விமானங்களையும் நாம் இழந்தோம் என்று மக்களவையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே பேசினார். மக்களவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விவாதத்தின்போது பாஜக எம்பி நிஷிகாந்த் துபே இந்தியில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வரும் மொழிபெயர்ப்பு அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பேச்சு தடைபட்டது. அதாவது அவர் இந்தியில் பேசுவதை மொழிபெயர்த்து எம்.பி.க்களின் ஹெட்போன் வழியே ஒலிபரப்பும் கருவி பழுதடைந்தது.