
மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிரான வழக்கில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்கள் என பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்றுமாறு நீதிபதி இளந்திரையன் ஜன.27-ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டமேல்முறையீட்டு மனுவை நீதிபதி நிஷாபானு அமர்வு தள்ளுபடி செய்தது.