
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன் (23). கடந்த 23-ம் தேதி பெங்களூருவில் இருந்து சித்ரதுர்கா திரும்பும்போது கார் விபத்தில் சிக்கிய அவர் தாவணகெரேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையின் போது அவருக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே மல்லிகார்ஜுனின் உடல்நிலை சீராகாததால் அவரை உயர் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறினர். இதனால் மல்லிகார்ஜுனின் தந்தை நாகராஜப்பா, தனது மகள் நிஷா (25) மற்றும் அவரது கணவர் மஞ்சுநாத்திடம் பெங்களூரு கொண்டு செல்லுமாறு கூறினார்.