
புதுடெல்லி: கடந்த 2006-ல் உ.பி.யின் நொய்டாவில் 31-வது செக்டார் குடிசைப் பகுதியில் ஏழைக் குடும்பங்களின் குழந்தைகள் தொடர்ந்து காணாமல் போயினர். அக்டோபர் 2006-ல் பாயல் எனும் இளம்பெண் காணாமல் போய் வழக்கு பதிவானது. பாயலின் கைப்பேசி ஒரு ரிக் ஷா ஓட்டுநரிடம் இருந்து போலீஸாரிடம் சிக்கியது.
பிறகு இதனை அவருக்கு வழங்கிய 31-வது செக்டார் டி-5 பங்களாவின் பணியாளர் சுரேந்தர் கோலி போலீஸாரிடம் சிக்கினார். விசாரணைக்கு பிறகு டி-5 பங்களா வளாகத்திலும் அதன் முன்புள்ள கால்வாயிலும் டிசம்பர் 2006-ல் தோண்டப்பட்டது. இதனுள் ஒன்றன்பின் ஒன்றாக சடலங்கள், எலும்புக்கூடுகள், 26 மண்டை ஓடுகளும் வெளியாகி நாட்டையே உலுக்கின.