• July 31, 2025
  • NewsEditor
  • 0

‘மக்களைக் காப்போம்… தமிழகத்தை மீட்போம்’ என தனது எழுச்சிப் பயணத்தை ஜூலை 7-ம் தேதி, கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து தொடங்கிய எடப்பாடியார் 16 நாட்களில் 35 தொகுதிகளை கடந்து தனது முதல்கட்ட பிராச்சாரப் பயணத்தை முடித்திருக்கிறார்.

2010 ஜூலையில் அப்போதைய திமுக ஆட்சிக்கு எதிராக கோவையில் தான் தனது முதல்கட்ட பிரச்சார பொதுக்​கூட்​டத்தை நடத்தினார் ஜெயலலிதா. அம்மா வழியில் இபிஎஸ்ஸும் கோவை மேட்டுப்​பாளை​யத்​தி​லிருந்து சென்டிமென்டாக இப்போதைய திமுக ஆட்சியை வீழ்த்​து​வதற்கான தனது பிராச்​சாரப் பயணத்தை அதே ஜூலை மாதத்தில் கடந்த 7-ம் தேதி தொடங்​கி​னார். ஆட்சிக்கு எதிரான தனது பிரச்​சாரப் பயணத்தின் தொடக்கம் பிரம்​மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்​காகவும் கோவையை தொடக்கப் புள்ளியாக தேர்வு செய்தார் இபிஎஸ். படை திரட்​டு​வதில் கைதேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தன்னளவில் சுறுசுறுவென சுழன்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *